இந்தியா-தனிநபர் வருவாய் ரூ.3000 ஆக உயர்வு!
டெல்லி: இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
கடந்த காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 5.8 சதவிகிதம் கூடுதலாகும். சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாகவே இந்த குறைவான வளர்ச்சி என்றும் இல்லாவிட்டால் இன்னும் வேகமான வருவாய் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரம் தேர்தல் காரணமாக மக்களிடம் சற்றே பணப்புழக்கம் உயர்ந்துள்ளது என்றும் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
தனிநபர் வருவாயல் லேசான முன்னேற்றம் காணப்பட்டாலும், உற்பத்திப் பிரிவில் கடும் சரிவு தொடர்வது, அரசைக் கவலை கொள்ள வைத்துள்ளது. 1 சதவிகிதத்துக்கும் குறைவான வளர்ச்சியே உற்பத்திப் பிரிவில் காணப்படுகிறது.
விவசாயத் துறையில் 2.7 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது ஆறுதல் தரும் இன்னொரு விஷயமாகும். தென் மாநிலங்களில் பருவ மழை ஆரம்பிக்கும் தருணம் இது என்பதால் மேலும் உற்பத்தி பெருகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது அரசு.












Click it and Unblock the Notifications