நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆன்லைனில் பார்க்கலாம்
சென்னை:
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன. www.annauniv.edu/tnpcee2002 என்ற முகவரியில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதிலும் கடந்த ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. சுமார் 1.5லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தின் 36 நகரங்களில் உள்ள 284மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடந்தது.
மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதையடுத்து, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போதுவெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் பாடத்தில் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஏ. சண்முகசுந்தரம் என்ற மாணவர் 100மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். கணிதத்தில் 50ம், இயற்பியலில் 50ம் அவர் பெற்றுள்ளார்.
மருத்துவத்தில் பொள்ளாச்சி மாணவரான பி. சரவணகுமார் மற்றும் திருநெல்வேலி மாணவி கே. ஹிதயா ஆகியோர்100 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையத்தில் இந்த தேர்வு முடிவுகள் இன்று ஒட்டப்படும். இதைத் தவிரபின்வரும் வெப்சைட் முகவரிகள் மூலமாகவும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்:
இவை தவிர (044) 8209999 என்ற தொலைபேசியிலும் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications