ஊட்டியில் போராட்டம் நடத்துகிறார் கவுடா
ஊட்டி:
விவசாயிகளின் நலன் காக்க மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஊட்டியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாதெரிவித்தார்.
ஊட்டியில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஊட்டி வந்துள்ள தேவகவுடாஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனைக் காக்கத் தவறி விட்டது. விவசாய விளை பொருட்களின் விலை கணிசமான அளவுவீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் நலன் காக்க போராட்டம் நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை. மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல. ஆனால் அரசின் கவனத்தைக் கவர இதைத் தவிரவேறு வழியில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள தவறான பொருளாதாரக் கொள்கையால் தேயிலை மட்டுமல்ல, அனைத்து விவசாயவிளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் சர்வதேச அளவில் ஏற்படும் வர்த்தக மாற்றத்தால் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்குள்ளாவார்கள்.அப்போது நிலைமை இன்னும் மோசமடையும். தேயிலை, ரப்பர், கரும்பு, தேங்காய் ஆகிய வற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்.
இதே போன்று 740 பொருட்களுக்கு விதிமுறைகளில், சர்வதேசச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு நீங்கும்போது விலையில்கடுமையான வீழ்ச்சியிருக்கும். இலங்கைத் தேயிலையின் வரத்து அதிகரிக்கும்.
தேயிலைப் பிரச்னைக்காக நான் ஊட்டி வந்துள்ளது, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கத் தான். இவர்களின் குரல் இந்தியா முழுவதிலும் தெரியவேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகிக்கிறேன்.
கடந்த 96-97ம் ஆண்டில், தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு 18 ரூபாயாக இருந்தது. தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ. 12 ஆக இருந்தால் கூடகட்டுபடியாகும். இதனை விட விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இப்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டு விட்டன. இதனால் இந்தியாவில் விவசாயம்நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி கட்ட அரசு முன்வரவில்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றார் தேவகவுடா.












Click it and Unblock the Notifications