விவசாயிகள் கண்ணீர்.. ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லையாமே
மேட்டூர்: குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள பாரம்பரியமாக, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தொடர்ச்சியாக 8 ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேட்டூர் அணையில் 85 முதல் 90 டிஎம்சி அளவிலான தண்ணீர் இருந்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட முடியும் என்ற நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் வெகுகுறைவாக 48. 29 டிஎம்சி குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

போதிய நீர் இல்லை
முன்னதாக, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி இருந்தால், தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடகா திறந்து விடும் என்றும், தற்போது, கர்நாடகா நீர்தேக்கங்களிலும் போதிய நீர் இல்லை எனவும் கர்நாடகா பொதுப்பணித் துறை அமைச்சரான ரேவண்ணா தெரிவித்தார்.

காவிரி நதிநீர் மேலாண்மை
இதனிடையே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. அதனைத் தொடர்ந்து காவிரி நதிநீர் மேலாண்மை அணையத்தின் கூட்டம் இந்த மாதம் 28 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக அரசு வஞ்சிக்கிறது
குறுவை சாகுபடிக்காக காலதாமதம் இன்றி ஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து விட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறந்து விடாமல் அதிமுக அரசு வஞ்சித்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி போராட்ட சூழலை ஏற்படுத்தி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

கடல் நீர்
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர் கல்லணை வழியாக கடைமடை பகுதியான நாகைக்கு வந்து சேர்கிறது. அதனை நம்பி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில், நாகப்பட்டினம் தேவநதி பாசன வாய்க்கால்கள் வழியாக கடல் நீர் உட்புகுந்து வருகிறது. அதனால் கடைமடை பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications