கல்லணையிலிருந்து காவிரி நீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகளின் நலனுக்காக கல்லணையிலிருந்து காவிரி நீர் சனிக்கிழமை திறந்துவிடப்பட்டது.
காவிரி டெல்டாப் பகுதியில் குறுவைப் பயிர் சாகுபடிக் காலம் துவங்கியுள்ளது. இதையடுத்து கடந்த 12 ம் தேதிமேட்டூரிலிருந்து காவிரித் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்தத் தண்ணீர் வெள்ளிக்கிழமை கல்லணைக்கு வந்துசேர்ந்தது. இந்த அணையிலிருந்து சனிக்கிழமை காவிரி டெல்டாப் பாசனப் பகுதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர்திறந்து விடப்பட்டது.
பூஜைகள் நடத்திய பின் மதகுகள் திறந்து விடப்பட்டன. பொங்கிப் பெருகி சென்ற காவிரித் தண்ணீர் விவசாயிகள்மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
காவிரி நீரை சிக்கனத்துடன் பயன்படுத்தி அதிக பலனை அடையுமாறு காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளைஅரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications