நிகழ் காலத்தில் நில்!
பால் -உற்-பத்-தி-யா-ளர்-க-ளுக்-கு 30 கோடி ஒதுக்--கீ-டு
சென்னை:
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 30 கோடி ரூபாயை முதல்வர் கருணா-நிதி ஒதுக்கியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து கோட்டையில் இன்று -முதல்வர், அதிகா-ரிகளுடன் ஆலோசனை -நடத்தினார்.ஆவினுக்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு ஏற்கனவே அரசு அளித்த 21 கோடி ரூபாய் போக, தற்போது 69 கோடி ரூபாய் -நிலுவை உள்ளது.
இத்தொகையை வழங்கும் வகையில் முதல் கட்டமாக 30 கோடி ரூபாயை பால் கூட்டுறவு இணையத்திற்கு வழங்குவது என்று -முதல்வர் கருணா-நிதி-முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே பால் கொள்தல் மற்றும் விற்பனை தொடர்பான பணிகளைக் கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு தொடர்ந்துசெயல்படும் வகையில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் இணையத்திற்கு பால் வாங்கும், விற்கும் விலையை நிர்ணயிப்பதற்கானஅதிகாரத்தை வழங்குவது, இணையத்தின் இயக்குனர் குழுவை -முறையாக அமைப்பது போன்ற -வ-நடவடிக்கைகளை எடுக்கவும் -முதல்வர் -முடிவுசெய்துள்ளார்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.