மண் சோறு சாப்பிடும் அமைச்சர்களுக்கு அதிகாரிகள் நிலை எப்படித் தெரியும்? – ராமதாஸ் தாக்குதல்
சென்னை: தமிழகத்தில் வேளாண்துறையைப் போல மேலும் பல துறைகளில் அமைச்சர்களால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக சார்பில் 2015 - 16 ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை நிதிநிலை அறிக்கையை சென்னையில் ராமதாஸ் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "நெல்லை மாவட்ட வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியை பறித்தது மட்டும் போதாது. அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும். வேளாண்துறையைப் போல மேலும் பல துறைகளில் அமைச்சர்களால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முத்துக்குமாரசாமி மாதிரி நிறைய பேர் உள்ளனர். விவசாயி ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் கூட குடிக்க மறுக்கும் அதிகாரிகள் இருக்கிறார்கள். அதுபோல் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு சாதாரணமாக வரவேண்டும். ஆனால் அதற்கு 10 லட்சம் கேட்டால் அவர்கள் எங்கு போவார்கள்.
எல்லா அமைச்சர்களுக்கும் வேலை என்ன என்றால், பணத்தை வசூல் செய்து கப்பம் கட்டுவது. அவர்கள் கொடுக்கக் கூடிய 10 சதவிகிதம், 20 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு மற்ற பணிகளுக்கு செல்வது. அதாவது மண் சோறு சாப்பிட கிளம்பிடுவாங்க. பால் குடம் தூக்க கிளம்பிடுவாங்க. யாகம் வளர்க்க கிளம்பிடுவாங்க.
பல்வேறு துறைகளுக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஒரே அமைச்சரிடம் பல்வேறு துறைகள் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதால், அவர்கள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications