சிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது?
Recommended Video

ஈரோடு: பவானிசாகர் அணையில் 8 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையிலிருந்து வழக்கமாக ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி அணையின் நீர்மட்டம் 97.86 அடியாகவும், நீர் இருப்பு 27 டிஎம்சி யாகவும் இருந்தது. இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 62.38 அடியாகவும் நீர் இருப்பு 8.1 டிஎம்சி யாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதியே பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நீர் இருப்பு குறைவின் காரணமாக பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அணைக்கு நீர் வரத்து 1,277 கன அடியாக இருக்கும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில், பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி வாய்க்கால் 2 ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications