ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு: கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100 அடிக்கு மேல் நீர் இருப்பு இப்போதே இருப்பதால், வருகிற ஜூன் மாதம் 12ம் தேதியன்று காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதுகுறித்து விவசாயத்திற்குத் தேவையான விவசாயக் கடன், விதை, உரம் போன்றவைகளை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடமிருந்து பல்வேறு முறையீடுகள் வந்த பிறகே மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதற்கு மாறாக இந்த ஆண்டு வேண்டுகோள் வருவதற்கு முன்பே மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications