டைம் ஓவர்.. ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்! ஒட்டுமொத்தமாக மாறும் கேம்! விஜய்க்கு எதிர்பாரா ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த அரசு யார் அமைப்பார்கள் என்ற கேள்வி இன்னும் பதில் இல்லாமல் உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த நகர்வுகளை கவனித்து வருகின்றனர். திருமா எடுக்கும் முடிவில் தான், தமிழகத்தின் அரசியலே நிர்ணயிக்கப்படவுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், தவெக இன்னும் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலையில் உள்ளது.

Vijay

இதனால் தமிழக அரசியலில் தொங்கு சட்டப்பேரவை நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். முதலில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

அறுதிப் பெரும்பான்மை

இதனால் தவெகவின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இன்னும் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு உறுப்பினர்கள் குறைவாக இருப்பதால், ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் இதுவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. மூன்று முறை ஆளுநரை நேரில் சந்தித்து விஜய் கடிதம் வழங்கியிருந்தாலும், பெரும்பான்மை உறுதி செய்யப்படவில்லை என்ற காரணத்தால் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இப்போது தமிழக அரசியலின் முழு கவனமும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவின் மீது திரும்பியுள்ளது.

தவெக

விசிக ஆதரவு கிடைத்தால் தவெக பெரும்பான்மைக்கு மிக அருகில் செல்லும். ஆனால் அந்தக் கட்சி எந்த நிபந்தனைகளை முன்வைக்கும், தவெக அதனை ஏற்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே அதிமுக தரப்பும் அமைதியாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

டிடிவி தினகரன்

"நல்ல செய்தி வரும்" என்று அவர் கூறியிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டும் பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது. அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரில் போலியான ஆதரவு கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

சட்டப்பேரவையின் பதவிக்காலம்

இந்நிலையில் நாளையுடன் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. அதன் பிறகு ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அரசியல் மற்றும் சட்ட ரீதியாக ஆளுநருக்கு தற்போது சில முக்கியமான விருப்பங்கள் உள்ளன. முதலில், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளித்து தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அப்படி அழைத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

அதிமுக - திமுக கூட்டணி

அல்லது அடுத்த பெரிய கூட்டணியாக இருக்கும் திமுக அல்லது அதிமுக அணிக்கு வாய்ப்பு வழங்கலாம். வெளியிலிருந்து ஆதரவு பெறும் கூட்டணிகள் மூலம் அரசு அமைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த இரண்டிலும் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான பரிந்துரையை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பலாம். அப்படி நடந்தால் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை செயலிழக்கும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி

பின்னர் ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கும். இதனால் அடுத்த சில மணி நேரங்கள் தமிழக அரசியலில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. விஜய் முதல்வராக பதவியேற்பாரா, புதிய கூட்டணி உருவாகுமா, அல்லது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+