திருச்செந்தூர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் தங்க ரூ. 1 கோடியில் மண்டபம்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியில் மண்டபம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர்களாக தேவதாச சுந்தரம், வக்கீல் சந்திரசேகரன், திலகவதி, தங்கத்துரை ஆகியோரா தேர்ந்தேடுக்கப்பட்டனர்.

உபயதார் சார்பில் தேவர் குடில் மேல்பகுதி, மற்றும் ஆறுமுக விலாசம் பகுதியில் கட்டப்பட்டு உள்ள 6 விஜபி தங்கும் விடுதிகளுக்கான பூமி பூஜை நடந்தது.

பி்ன்னர் தேவதாச சுந்தரம் கூறுகையில், திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதால் வளர்ச்சி திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். முதல் கட்டமாக ஆனந்த விலாச மண்டபம் கட்டப்படும். இதற்கான மதிப்பீடு தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

மண்டபத்தில் பக்தர்கள் விரதம் இருப்பதற்காக வசதியாக ரூ.1 கோடியில் பிரமாண்ட கந்த சஷ்டி மண்டபம் மற்றும் கலையரங்கம் பின்புறம் 100 அறைகள் கட்டப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாதத்தில் முடிவடையும்.

திருச்செந்தூர் வேட்டையாடி மண்டபம் அருகே 1 கோடி மதிப்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தங்கும் மண்டபம் கட்டப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+