For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
வீரனுக் கேயிசைவார் - திரு
மேதினி எனுமிகு மனைவியர்தாம்
ஆரமர் தமரல்லார் - மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்
பாரத நாட்டினிலே - அந்தப்
பாண்டவ ரெனப் புகழ் படைத்திடுவாய்
சோரர்தம் மகனோ நீ! - உ.யர்
சோமன்ற னொருகுலத் தோன்றலன்றோ? (94)
தம்மொரு கருமத்திலே - நித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை
இம்மியுங் கருதாமை - சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல் .
இம்மையில் இவற்றினையே - செல்வத்
திலக்கணம் என்றனர் மூதறிஞர்.
அம்ம, இங்கிதனை யெலாம் - நீ
அறிந்திலையோ! பிழை யாற்றல் நன்றோ? (95)
Comments
Story first published: Monday, March 2, 2009, 20:45 [IST]