For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
புன்தொழிற் கவறத னில் - இந்தப்
புவிமிசை இணையிலை எனும்புக ழான்
நன்றறி யாச்சகுனி - சபை
நடுவினில் ஏறெனக் களித்திருந் தான்
வென்றிகொள் சித்திர சேனனுடன்
குன்றுசத் தியவிர தன் - இதழ்
கூர்புரு மித்திரன் சயனென்பார். (164)
சாலவும் அஞ்சு தரும் - கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம் வல்லோர்
கோலநற் சபைதனிலே - வந்து
கொக்கரித் தார்ப்பரித் திருந்தினரால்,
மேலவர் தமை வணங்கி - அந்த
வெந்திறற் பாண்டவர் இளைஞர் தமை
ஆல முற்றிடத் தழுவிச் - செம்பொன்
ஆதனத் தமர்தவப் பொழுதினிலே. (165)
சொல்லுகின் றான் சகுனி - அறந்
தோன்றல்! உன் வரவினைக் காத்துனர் காண்
மல்லுறு நடந்தோளார் - இந்த
மன்னவ ரனைவரும் நெடும்பொழு தா
வில்லுறு போர்த்தொழி லாற் - புவி
வென்று தங்குலத்தினை மேம்படுத்தீர்!
வல்லூறு சூதெனும் போர் - தனில்
வலிமைகள் பாக்குதும் வருதி என்றான். (166)
(அடுத்தது தருமன் மறுத்தல்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]