பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஒளியும் இருளும்
(தொடர்ச்சி)
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாமயங்கிநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்த்தோர்
சிறிய நெஞ்சத் தியங்குவ தென்னே! (3)
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத் தொழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ னாதநல் லின்பக் கருவாம்
வேர்ச் சுடர் பரமாண் பொருள் கேட்டும்
மெலிவோர் நெஞ்சிடுடைமேவுதல் என்னே! (4)
(தொடரும்)












Click it and Unblock the Notifications