பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கண்ணன் திருவடி
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணம்ந் தருமே. (1)
திண்ணம் அழியா, வண்ணம்ந் தருமே. (1)
தருமே நிதியும், பெருமை புகழும்
கருமா மேனீப், பெருமா ளிங்கே. (2)
இஙகே யமரர் சங்கந் தோன்றும்
மங்கும் தீமை, பொங்கும் நலமே (3)
நலமே நாடிற் புலவீர் பாடீர்,
நிலமா மகளின் , தலைவன் புகழே. (4)
புகழ்வீர் கண்ணன், தகைசே ரமரர்
தொகையோ டசுரப், பகைதீர்ப் பதையே (5)
தீர்ப்பான் இருளைப், போர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர், பார்ப்பார் தவமே: (6)
தவறா துணர்வீர், புவியீர் மாலும்
சிவனும் வானோர், எவரும் ஒன்றே. (7)
ஓன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே. (8)
(தொடரும்)












Click it and Unblock the Notifications