பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 13, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
12.
வெம்மைத் தெய்வமே,ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத்
தோன்றும் விழிகளின் தாயகமே,
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளி மழையே, உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்னும் குறத்தியை உலக
மென்னும் புளங் காக்கச் சொல்லிவைத்து விட்டுப் போன
விளக்கே,
கண்ணென்னும் கள்வன் அறிவென்னும் தன் முகத்தை
மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே.
ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்
மழையும் நின் மகள், மண்ணும் நின் மகள்,
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்:
வெளி நின் காதலி:
இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன்.
நின்னைப் புகழ்கின்றோம்.
தேவர்களெல்லாம் ஒன்றே.
காண்பனவெல்லாம் அவருடல்,
கருதுவன அவருயிர்,
அவர்களுடைய தாய் அமுதம்.
அமுதமே தெய்வம், அமுதமே மெய்யொளி,
அஃது ஆத்மா.
அதனைப் புகழ்கின்றோம்.
அதன் வீடாகிய ஞாயிற்றைப் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications