பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜூன் 13, 2001
13.
இரைகின்ற கடல் -நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது.
அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால்,
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில்.
ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே!
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது அங்கு மாட்டின்
உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது
உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி? உயிருள்ளது.
நீராவி வண்டி உயிருள்ளது: பெரிய உயிர்.
யந்திரங்களெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுயன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும்
உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது.
சந்திரன் சுழல் கின்றது ஞாயிறு சுழல்கின்றது.
கோடி கோடி கோடி கோடி போஜனை தூரத்துக்கப்பாலும்
அதற்கப்பாலும், அதற்கப்பாலும் சிதறிக் கிடக்கும்
வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்றுகொண்டேதான்
இருக்கின்றன.
எனவே, இவ் வையகம் உயிருடையது.
வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம்.
அவனை முப்போதும் போற்றி வாழத்துதல் செய்கின்றோம்.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications