ரொரன்ரோவில் பொங்குதமிழ் நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

Crowdதமிழ் மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் ரொரன்ரோவில் அமையப்பெற்ற ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில்பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.

ஈழத்தமிழர்களுடன் அமெரிக்கா, கனடா வாழ் தமிழகத் தமிழ் தமிழர்களும் இணைந்து விடுதலைப் புலிகள்சமர்ப்பித்து உள்ள இடைக்கால நிர்வாகசபை அடிப்படையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். மக்கள் கூட்டத்தினர் தமது கைகளில் தமிழீழக் கொடிகளை ஏந்தியும்விடுதலைப்புலிகள் இயக்ணீத் தலைவர் பிரபாகரனின் படத்தினை ஏந்தியும் இருந்தனர்.

புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜக் லெயிற்றன் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு தனது கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். அத்தோடு இந்த நிகழ்வுக்கு இலங்கையில்இருந்து வருகை தர விருந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்குகொழும்பில் விசா மறுக்கப்பட்ட விடையத்தை தான் நாடாளுமன்றத்தில் எழுப்பப் போவதாகவும் கூறிய அவர்,கனடிய அரசு பேச்சு வார்த்தையில் மேலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சைவேண்டுவதாகவும் கூறினார்.

Eventபுதிய ஜனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் பெறோ தனது பதினெட்டுஆண்டு கால அரசியல் வாழ்வில் இவ்வாறானதொரு கூட்டத்தைக் கண்டதில்லை என்றும் கனடாவிலேயே பிறந்துவளர்ந்த நான் குயின்ஸ் பார்க்(நாடாளு மன்றத்திடல்) வரலாற்றிலேயே இவ்வாறானதொரு கூட்டத்தைப்பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மொழிக்கு தமிழ்நாடு அரசு செய்யும் தொண்டைக்காட்டிலும் வன்னி(தமிழீழம்) பெருந்தொண்டாகஇருக்கின்றது என கூட்டத்தினர் மத்தியில் காணப்பட்ட தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவையின் மாணவர் அமைப்பு துணைத்தலைவர் செந்தில் சேரன் தெரிவித்தார்.

நிறைவாக கனடிய அரசும் அனைத்துலக சமூகமும் இலங்கை அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்க இலங்கைஅரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொங்குதமிழ்" நிகழ்வு முதன் முதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் 2001ம் ஆண்டுதொடங்கப்பட்டு. பின்னர் ஜெர்மனி, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், நார்வே, டென்மார்க் உட்பட பல்வேறு தமிழர்வாழும் நாடுகளிலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

(ஒளிப்பட உதவி: முழக்கம்)

- முழக்கம் திரு( [email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+