ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் வெளியீடு
டிசம்பர் 23, 2004
சென்னை:
ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 25ம் தேதி (சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா.அருணாசலம்தலைமை தாங்குகிறார்.
தமிழிசைப் பாணர் திருவாரூர் சீதாலட்சுமியின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. கவிஞர்வைகைச்செல்வி வரவேற்புரை ஆற்றுகிறார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நூலை வெளியிட, அதை பாரத் மேட்ரிமோனி டாட்காமின் முதன்மைச் செயல் அலுவலர் முருகவேல்ஜானகிராமன் பெற்றுக் கொள்கிறார்.
மதுரா டிராவல்ஸ் நிர்வாக இயக்குநர் கலைமாமணி வீ.கே.டி. பாலன், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், தீம்தரிகிட ஆசிரியர்ஞாநி, தினமணிக்கதிர் இதழாசிரியர் நோட்டம் சுகதேவ், திரைப்பட இயக்குநர் சீமான், கேலக்ஸி மீடியா பப்ளிகேஷன்ஸ் ரமேஷ்பிரபா ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர்.
இறுதியில் ஜெயபாஸ்கரன் நன்றியுரை நிகழ்த்துகிறார். விழாவினை பேராசிரியர் நிர்மலா ராஜேந்திரன் தொகுத்து வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications