For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியில் வைரமுத்துவின் கவிதைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளின் இந்தி மொழிபெயர்ப்பு புத்தகமாக நாளை வெளியாகிறது.

கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக வளமான திரைப்படப் பாடல்களை எழுதி வரும் வைரமுத்து 600க்கும்மேற்பட்ட தமிழ்க் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது கவிதைகள் "ஏ டிராப் இன் ஸர்ச் ஆப் தி ஓஷன்" என்றபெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அந்த நூல் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்முன்னிலையில் வெளியிடப்பட்டது.

Vairamuthuஇந் நிலையில் இப்போது அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட 60 கவிதைகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.வைரமுத்துவின் புகழ்பெற்ற கவிதைகளான ஒன்பதாம் யோகம், முதிர்கன்னி, ஓ நயாகரா, சிறகாயணம், ஞானத்தீ,இலை, ஒரு நதியின் விதி, கூடு, விலங்கு முதலான உலகம் முழுமைக்கும் பொருந்தும் கவிதைகள் இதில் அடங்கும்.

தமிழிலும், இந்தியிலும் புலமை மிக்க செளரிராஜன், டாக்டர் சுப்பிரமணியம், இந்தர்ராஜ் பெய்த்,பாலசுப்பிரமணியம், ஈஸ்வர் கரூண் ஆகியோர் அடங்கிய குழு இந்தக் கவிதைகளை மூன்றாண்டுகளாய்மொழிபெயர்த்து பல முறை திருத்தம் செய்துள்ளது.

இக் கவிதைகள் பிரபல இந்தி இலக்கியப் பத்திரிக்கைகளிலும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. "பிந்துசிந்து கி ஓர்" என்ற தலைப்பில் இக் கவிதை நூலை டெல்லியி லுள்ள ராஜ்கமல் பதிப்பகம் வெளியிடுகிறது.

நாளை மாலை 6 மணிக்கு டெல்லி கோப்பர் நிக்கஸ் மார்க்கில் அமைந்திருக்கும் எல்.டி.ஜி. கலையரங்கத்தில் புத்தகவெளியீட்டு விழா நடைபெறுகிறது. சாகித்ய அகாடமியின் தலைவர் கோபிசந்த் நாரங் கவிதை நூலை வெளியிடஇந்திக் கவிஞர் குல்சார் முதற்பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன்ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X