என் தலை கனக்கிறது-ஜெயகாந்தன்
சென்னை:கலைஞர் விருதைப் பெற்றதால் எனது தலை கணக்கிறது, அதனால் பணிவோடு தலை குனிகிறேன் எனஎழுத்தாளர் ஜெயகாந்த் கூறினார்.
![]() முதல்வர் கருணாநிதியிடம் கலைஞர் விருது பெற்ற பின் அவர் பேசுகையில், நான் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறேன். அந்த விருதுகள் எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தது தான்.ஆனால், கலைஞர் விருது யாரும் எதிர்பாராதது. தமிழர்கள் போராடி எனக்கு ஞானபீட விருது பெற்றுத் தந்தார்கள். அதுபோல இந்த விருதிலும் ஏதாவது சூழ்ச்சிஇருக்குமோ என எண்ண வேண்டாம். கருணாநிதி அவராகவே இருக்கிறார், நான் நானாகவே இருக்கிறேன். எங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கட்டும், பகைமை ஏன் இருக்க வேண்டும். எங்களை இணைத்து வைப்பதுமொழி. இதுவரை நான் பெற்ற விருதுகளை விட இதுதான் மிகச் சிறப்பானது. இந்த விருதைப் பெற்றதால் எனது தலை கணக்கிறது, அதனால் பணிவோடு தலை குனிகிறேன் என்றார். சிலம்பொலி செல்லப்பன் பேசுகையில், மேடையின் பின்புறம் உள்ள கருணாநிதியின் படத்தில் நெற்றியில் 3கோடுகள் உள்ளன. அப்படி இருந்தால் எந்த எதிரியாலும் வெல்ல முடியாது. உங்களையும் யாராலும் வெல்லமுடியாது என்றார். வழக்கம் போல மனோரமாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். முதல்வர் கருணாநிதியோடு நடித்த ஒரே நடிகைநான்தான். மணிமகுடம் நாடகத்தில் அவர் நாயகன், நான் நாயகி. சினிமா துறையில் எல்லோரும் ஆச்சி என்றுஎன் காலை தொட்டு வணங்குவார்கள். நான் கருணாநிதியின் காலை தொட்டு வணங்குகிறேன். அவர் 100 வயதைத் தாண்டியும் வாழ்ந்து நாட்டை ஆளவேண்டும் என்றார். |













Click it and Unblock the Notifications