பாட்டில் எடுத்தா தான் பாட்டா?
பாட்டிலை எடுத்தால் தான் பாட்டு எழுத முடியும் என்றரீதியில் இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் உள்ளனர் என்றுகவிஞர் வைரமுத்து கவலையுடன் கூறியுள்ளார்.
![]() ஈரோடு கொங்கு கலையரங்கில், மஞ்சள் நகர அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட செட்டிநாடு மண்டல அரிமாக்கள் சந்திப்பு நிகழச்சியில் கவிஞர்வைரமுத்து கலந்து கொண்டார். அவர் பேசுகையில், சாதி, மதம் கடந்து சமூக சிந்தனையுடன் மக்கள் தொண்டாற்ற வேண்டும். கண்ணதாசன் கவிதைகளுக்கு அடிமையாக இருந்திருக்கிறேன். அவர்போன்ற ஒரு கவிஞர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது. அவரை போன்று பாட்டெழுதி சம்பாதித்தவர்கள் இல்லை. துட்டுக் கொடுத்தால்தான் மெட்டு வரும் என்பதை போல் பணம் வாங்கிய பிறகு தான்பாட்டெழுத ஆரம்பிப்பார். மது குடிப்பது வழக்கமாக இருந்தாலும், குடித்துவிட்டு பாட்டு எழுதுவது கிடையாது. தேவையான பாடல்களை எழுதியபிறகு, அந்த சோர்வு நீங்கவே மது அருந்துவார். ஆனால் இன்றோ பாட்டில் எடுத்தால் தான் பாட்டு வரும் என பல புதிய இளம் பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். மது குடித்தபின்எழுதப்படும் பாட்டு அந்த கவிஞனுக்கு சொந்தமில்லை. இதை இன்றைய இளம் கவிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். |













Click it and Unblock the Notifications