கி.ரா.வின் 'இடைசெவல்' வெளியீடு!

Subscribe to Oneindia Tamil

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் டாக்குமென்டரி சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

கரிசல் மண்ணின் மணத்தையும், அதன் கலாச்சாரத்தையும் தரணி தோறும் தமிழ் மணம் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர் கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணன். தமிழ் கூறும் நல்லுலகின் வளமையான, செழுமையான மண்ணின் மணம் மறவாத, மாறாத முக்கிய எழுத்துப் பிதாமகர்களில் அவரும் ஒருவர்.

கி.ரா. எழுதிய இடைசெவல் என்கிற நாவலின் பெயரில் ஒரு ஆவணப் படம் உருவாகியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த தமிழ் கல்வி கலாச்சார அமைப்பின் வசந்தி பிரகலாதன் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி முதல் சிடியை வெளியிட அதை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், எழுத்தாளரும், எம்.எல்.ஏவுமான ரவிக்குமார், கலை விமர்சகர் இந்திரன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+