பேராசிரியைகளின் நூல்கள் வெளியீடு
பழனி: பழனி பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் எழுதிய 4 நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன.
பழனி அருள்மிகு பழனி யாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜானகி கவிதை மற்றும் ஓரங்க நாடகம் என்ற நூலையும், பேராசிரியர் சந்திரா உரைநடையும் சிறுகதையும் என்ற நூலையும், பேராசிரியர் ராஜாமணி ஷேக்ஸ்பியரின் படைப்புகள் என்ற நூலையும், ஆங்கிலத்துறை தலைவர் கனிதா, பேராசிரியர் மீனாகுமாரி ஆகியோர் ஆங்கிலத்திறன் வளர்த்தல் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர்.
இந்த 4 நூல்களையும் வெளியிடும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் தேமொழி, மதுரை மீனாட்சி கல்லூரி பேராசிரியர் லீலாவதி, விருது நகர் வன்னிய பெருமாள் கல்லூரி பேராசிரியர் பவானி, உடுமலை ஜி.வி.ஜி. கல்லூரி பேராசிரியர் அமுதவள்ளி, திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி பேராசிரியர் சுமதி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டனர்.
மாணவ-மாணவிகள், வாசகர்களின் ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் பாராட்டினர்.
நியு செஞ்சுரி புத்தக பதிப்பகம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, பழனி பெண்கள் கல்லூரி பேராசிர்யர்கள் குமார், காசி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications