Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி தமிழ்ச் சங்க தோரண வாயில்-அரசு உதவி

Subscribe to Oneindia Tamil

Delhi Tamil Sangam representatives meeting CM Karunanidhi
டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

டெல்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் கவனிப்பாரின்றி, அவல நிலையில் இருந்த திருவள்ளுவர் சிலையை அங்குள்ள தமிழ் சங்க வளாகத்துக்கு மாற்ற டெல்லி அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து தமிழ்ச் சங்க வளாகத்தில் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந் நிலையில் சென்னை வந்த டெல்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், பொருளாளர் என்.சந்தானம், துணைப் பொதுச் செயலாளர் ராகவன் நாயுடு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து சிலையை இடம் மாற்ற உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் சிலை திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த அழைப்பை கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

மேலும் டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் முத்தமிழின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தோரண வாயில் அமைக்கவும் தமிழக அரசின் சார்பி்ல நிதியுதவி வழங்கவும் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+