கோடகநல்லூரில் இன்று தாமிரபரணி ஜெயந்தி
நெல்லை: வற்றாத ஜீவநதி என பெருமிதமாக கூறப்படும் தாமிரபரணி ஆறு அவதரித்த தினமான இன்று தாமிரபரணி ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தாமிரபரணி நதியின் அவதார தினம் வைகாசி விசாக தினம். இந்நாளில்தான் முருக பெருமான், நம்மாழ்வார், ஆகியோர் அவதரித்துள்ளனர். தாமிரபரணியின் அவதார தினத்தை தாமிரபரணி ஜெயந்தி என கொண்டாடி வருகின்றனர்.
கங்கை, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி போன்ற தீர்தத்தங்களில் நீராடி வழிபாட்டாலும், உலகத்தில் உள்ள 66 கோடி தீர்த்தங்களில் வழிபட்டாலும், பிதுர்தோஷம், புத்திரதோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என புராணங்கள் கூறுகின்றன.
இதன் அடிப்படையில் அவிமுக்திஷேத்திரம் என அழைக்கப்படும் கோடநல்லூரில் உள்ள ப்ருஹன் மாதவபெருமாள் கோயில், மேற்கு பார்த்த சிவாலயமான அவிமூக்தீஸ்வரர் கோயில், ஆதிசங்கரர் மடம் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்படுகின்றன.
கோடகநல்லூரில் தாமிரபரணி ஜெயந்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை, சிருங்கேரி சாரதாபீட பக்தர்கள், கோடகநல்லூர் பொதுமக்கள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications