துபாய் குறித்த தமிழ் நூல் உருவாகிறது-தகவல்கள் தர கோரிக்கை
துபாய்: துபாய் நகர் குறித்த விரிவான நூல் ஒன்றை உருவாக்கிடும் பணி தொடங்கியுள்ளது. இந்த நூலுக்கு, துபாய் குறித்த விவரங்கள் வைத்திருப்போர் பங்களிக்கலாம் என கோரப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் 'துபாய்' குறித்த நூல் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் ஈடுபட்டுள்ளார்.
இதில் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் குறித்த தகவல்கள், துபாய் பற்றிய பல அரிய தகவல்கள் இடம்பெற இருக்கின்றன.
துபாய் குறித்து தங்களுக்குத் தெரிந்த பல்வேறு தகவல்களையும் அறியத் தருவதன் மூலம் இந்நூல் மேலும் சிறப்புறும் என்று கோரப்பட்டுள்ளது.
தகவல்களை அளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பேராசிரியர் கா. முஹம்மது பாரூக்
நன்னெறி பதிப்பகம்
எண் 17-18 பி, பாறையடி தெரு
அஞ்சுவண்ணம்
திருவிதாங்கோடு 629 174
கன்னியாகுமரி மாவட்டம்
தொலைபேசி : 04651 - 248911
அமீரகத்தில் தொடர்புக்கு : 055 4067047












Click it and Unblock the Notifications