செச்னியாவிலிருந்து .. குஜ்ஜார்கள்!

ராஜஸ்தானில் தொடங்கி இன்று டெல்லி வரை வியாபித்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் குஜ்ஜார் சமுதாயத்தினர். தாழத்தப்பட்ட சமூகத்தினர் என்ற அந்தஸ்தை தங்களுக்குத் தர வேண்டும் என்பதே குஜ்ஜார்களின் ஒரே கோரிக்கை.
குஜ்ஜார்களின் போராட்டம் இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், அவர்களின் ஒற்றுமை, விடாப்பிடியான போராட்டம்தான்.
சரி, யார் இந்த குஜ்ஜார்கள்?
குஜ்ஜார்கள் யார் என்பதை அறிய 1500 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் போக வேண்டும் - ராஜஸ்தானுக்கு அல்ல, செச்னியாவுக்கு.
ரஷ்யாவின் குட்டிப் பிரதேசம்தான் செச்னியா. இங்குதான் குஜ்ஜார்களின் பூர்வீகம் புதைந்து கிடக்கிறது. இங்கிருந்தும், அருகாமையில் உள்ள ஜார்ஜியாவிலிருந்தும் குஜ்ஜார்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்கடுக்காக கிளம்பி பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு புலம் பெயர்ந்து வந்தனர்.
குர்ஜார், குர்ஜாரா, குஜார், கூஜார் என பல்வேறு பெயர்களில் குஜ்ஜார்கள் அழைக்கப்படுகின்றனர். ஹூனர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த காலகட்டமான நான்கு மற்றும் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் குஜ்ஜார்களும் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.
இவர்களின் ஆதி பூர்வீகம், கஸார் பழங்குடியினம் என்ற கருத்தும் உள்ளது. இதன் அடிப்படையில்தான் தங்களை பழங்குடியினர் என்று கூறுகின்றனர் குஜ்ஜார்கள்.
ஜார்ஜியாவுக்கு அக்காலத்தில் குஜாரிஸ்தான் என்ற பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. குஜ்ஜார்கள் நிறைந்திருந்த காரணத்தால்தான் அந்தப் பெயராம்.
சில வரலாற்று ஆவணங்களின்படி, குஜ்ஜார்கள் செளராஷ்டிரப் பகுதியில் பெரும் மன்னர்களாகவும், நிலக்கிழார்களாகவும் இருந்துள்ளனர். பின்னர் வட இந்தியாவுக்கு அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த குஜ்ஜார்கள், பின்னர் ஷத்திரிய வர்ணா என்ற ஜாதி அடையாளத்திற்குள் கரைந்து போயுள்ளனர். குஜ்ஜார்களில் ஒரு பிரிவினர் தங்களை பிராமணர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தின் மீத முஹம்மதியர்கள் படையெடுத்து வந்தபோது, குஜ்ஜார் இந்துக்கள் பலர் முஸ்லீம்களாக மாறியுள்ளனர்.
இப்போதுள்ள குஜ்ஜார்கள், இந்தோ- ஆரிய காலத்திற்கும், உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட திருமண பந்தத்தால் ஏற்பட்ட கலப்புறவில் உருவான வம்சாவளியினர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
18ம் நூற்றாண்டில், குஜ்ஜார்கள் குறு நில மன்னர்களாக இருந்துள்ளனர். பலர் ஜமீன்தாரர்ளாகவும் இருந்துள்ளனர். மீரட் மாவட்டத்தில் உள்ள பர்லசாட்கர் என்ற இடத்தில் உள்ள கோட்டையை, குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த ராஜா நயன் சிங் என்பவர் கட்டியதாக ஆவணங்கள் உள்ளன.
குஜ்ஜார்களின் வரலாறு பல அரிய தகவல்களைக் கொண்ட பெரும் வரலாற்று சமாச்சாரம். ஆனால் இன்றோ தங்களது அடையாளத்திற்காக குஜ்ஜார்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை காலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications