துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு
துபாய்: துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது பாரூக்குக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
துபாயில் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் தமிழக கல்வியாளரும், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த உணவு விடுதியான யும்மி இந்தியன் உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமீரக தமிழர்கள் அமைப்பின் நிர்வாகி பரத் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார். செயலாளர் சைபுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத் பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். பேராசிரியர் முஹம்மது பாரூக் கல்வித்துறையில் முப்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்கவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்க அவர் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றவர். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
செந்தில், மதுக்கூர் அன்வர்.அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் முஹம்மது பாரூக் அவர்கள் தமது ஏற்புரையில் அமீரகத்தில் கணினியில் தமிழ் எனும் நன்னோக்கோடு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளைப் பாராட்டினார்.
மேலும் கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கு தமிழில் ஆர்வமேற்படும் வண்ணம் தமிழ் பயிற்சி வகுப்புகள், உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழர் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்தினார்.
ஹமீது யாசின் நன்றியுரை கூறினார்.
தொடர்பு முகவரி :
அமீரகத் தமிழர்கள் அமைப்பு துபாய்
தபால் பெட்டி எண் 86776
துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்
மின்னஞ்சல் : [email protected]












Click it and Unblock the Notifications