காரைக்குடி கவிஞருக்கு டெல்லி தமிழ்ச் சங்க விருது
Subscribe to Oneindia Tamil

திருவையாறு ஒளவைக் கோட்டமும், தஞ்சாவூர் கட்டிடக்கலைத் துறை பல்கலைக்கழகமும் இணைந்து டெல்லி தமிழ்ச் சங்கத்தில் அனைத்துலக வளர் தமிழ் ஆய்வு மாநாடு நடத்தியது.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மனோ. இளங்கோவனுக்கு தமிழ்ச் சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் வழங்கினார்.
முன்னதாக மனோ. இளங்கோவன் தமிழ் புத்தாண்டு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
ஏராளமான கவியரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ள இவர் கவியழகில் முடியரசன் என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார். தற்போது ஜீவா பற்றிய கவிதை தொகுப்பு ஒன்றையும் உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications