பெற்றெடுத்தால் போதுமா நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி: எழுத்தாளர் அரிமா கே.மூர்த்தி எழுதிய "பெற்றெடுத்தால் போதுமா?' என்ற நூல் வெளியீட்டு விழா வாணியம்பாடி ஆம்பூர்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உதவும் உள்ளங்கள் தலைவர் ஜெ.ரத்தன்லால் ஜெயின் தலைமை வகித்தார். டி.தங்கராஜ் வரவேற்றார்.
முன்னாள் எம்.பி. ஆ.ஜெயமோகன் நூலின் முதல் பிரதியை வெளியிட, எஸ்.பாபுகவிதா பெற்றுக்கொண்டார். விழாவில் மணிமேகலைப் பிரசுரம் ரவிதமிழ்வாணன், பேராசிரியை ருக்மணி பன்னீர்செல்வம், திருவலம் ஸ்ரீ சர்வ மங்கள பீடம் சாக்தஸ்ரீ சாந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நூல் ஆசிரியர் அரிமா கே.மூர்த்தி ஏற்புரையாற்றினார்.
முன்னதாக, நகரில் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications