For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் உலக இசை மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூரில் ஜூலை 11-ம் தேதி உலக இசை மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் உலகின் மிகப் பெரிய தம்புரா காட்சிக்கு வைக்கப்படுகிறது.

உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாநாடு பெங்களூரில் ஜூலை 11-ம் தேதி துவங்குகிறது. பெங்களூரு இந்திரா நகர் 8-வது முக்கியச் சாலையில் உள்ள இந்திரா நகர் சங்கீத சபாவில் நடைபெறும் இந்த மாநாடு ஜூலை 16-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டையொட்டி கருத்தரங்கம், இசையரங்கம், சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. உலக இசைக் கலைஞர்கள் கூடும் இந்த மாநாட்டில் உலகின் மிகப் பெரிய தம்புரா காட்சிக்காக வைக்கப்படுகிறது.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள சிவா மியூசிக்கல் என்ற இசைக் கருவிகள் தயாரிப்பு நிறுவனம் இந்த தம்புராவை செய்துள்ளது.

11 அடி நீளம், 3 அடி உயரம் (குடம்), 150 கிலோ எடை கொண்ட இந்த தம்புரா பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும்.

பெங்களூரைச் சேர்ந்த தமிழர் நடராஜன், அவரது மகன் வினோத் நடராஜன் ஆகியோர் இந்த தம்புராவை வடிவமைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X