கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கவிதை பூங்கா இதழின் தொடக்க விழா, நூல் வெளியீட்டு விழா, நூல் அறிமுக விழா ஆகிய முப்பெரும் விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகள் மகாலட்சுமி, கிருத்திகா ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரி மாணவி ரஞ்சிதா மூன்றாமிடத்தையும், ஜமால் முகம்மது கல்லூரி மாணவி ரமேஷ் 4-வது இடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அதங்கோடு அனிஷ்குமார் எழுதிய 'நிறங்களின் பேராசைக்காரர்கள்' என்ற நூலை பேராசிரியர் இ. சூசை வெளியிட முதல் பிரதியை அகஸ்தியர் எஸ். கோபாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் அய்யம்பிள்ளை, க. ராஜவேலு செண்பகவல்லி, க. தமிழழகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications