மாணவர்களுக்கு பாவேந்தர் பாடல் ஒப்பித்தல் போட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி 9,10 தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியண்ணன் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி முரசொலி அறக்கட் டளையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் ஒப்புவித்தல் போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை) வடக்கு ராஜ வீதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் தமிழறிஞர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தனித்தனியாக முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளும், 5 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.
முதல் இரண்டு பரிசு பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பரிசு சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அடுத்த மாதம் 8-ந் தேதி, 9-ந் தேதிகளில் வழங்கப்படும்.
மூன்றாம், ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு வங்கி வரைவோலை மற்றும் பாராட்டு சான்று ஆகியவை மாணவர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பரிசு விபரம்:
மாவட்ட அளவில் முதல் இரண்டு இடத்தை பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 8,9-ந் தேதிகளில் காலை 10 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் இறுதிப் போட்டி நடைபெறும்.
இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க தலைமை கழகத்தால் செப்டம்பர் மாதத்தில் நடை பெறும் முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் முதல்வர் கருணாநிதி நேரடியாக வழங்குகிறார்.
பள்ளி மாணவர்களுக்கு...
பாவேந்தர் பாரதிதாசனின் இசையமுது எனும் நூலில் தமிழ்ப்பகுதி எனும் தலைப்பில் தமிழர் முரசு எனும் பாடலில் உயர்வென்று கொட்டுக முரசே... எனத்தொடங்கி நாற்றிசை முற்றும் முழக்கு உயர்வென்று கொட்டுக முரசே... என்பது வரை (இருபது வரிகள்), புரட்சி கவிஞர் பாரதிதாசனார் கவிதைகள் எனும் நூலில் 55 சாய்ந்த தராசு எனும் தலைப்பில் வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி எனத் தொடங்கி மிக்கவரின் தொகை கொஞ்சமோ என்பது வரை 25 வரிகள், இசையமுது எனும் நூலில் தமிழ்பகுதி எனும் தலைப்பில் தமிழனே இது கேளாய் எனத்தொடங்கி இந்நாள் அவரஞ்சி விழித்தார் தமிழனே இது கேளாய் என்பது வரை (17 வரிகள்) இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு:
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்குரிய பாடல்கள் பின்வருமாறு:
புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் திராவிடர் திருப்பாடல் எனும் தொகுப்பில் தட்டுப்படாது ஒழுக்கம் எனும் தலைப்பில் தட்டுப்படாது பெரும் பொருட்கொரு.. எனத் தொடங்கி இவையே திராவிடர் ஒழுக்கம் என்பது வரை (64 வரிகள்), புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் தமிழ் எனும் தொகுப்பில் தமிழ் வாழ்த்து என்னும் தலைப்பில் தமிழே வாழ்க தாயே வாழ்க எனத் தொடங்கி ஓரா உலகின் ஒளியே வாழ்க என்பது வரை (32 வரிகள்).
புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் நூலில் எந்நாளோ எனும் தலைப்பில் என்னருந்தமிழ் நாட்டின் கண் எனத் தொடங்கி சொக்கும் நாள் எந்நாளோ என்பது வரை (40 வரிகள்) இருக்க வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன், எனக் கூறியுள்ளார் பெரியண்ணன்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications