கத்தார் இந்தியர்கள் எண்ணிக்கை 4.2 லட்சமாக உயர்வு

இதுகுறித்து கத்தார் நாட்டு உள்நாட்டு விவகாரத்துறை இணை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் கலீபா அல்தானி கூறுகையில், ஜூலை 31ம் தேதியுடன் கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இது எங்களது நாட்டு உள்ளூர் மக்களை விட 2 மடங்கு அதிகமாகும். இது இன்னும் கூட அதிகரிக்கும். இத்தனை இந்தியர்கள் இருந்தாலும் எங்களுக்கு அவர்களால் எந்தவிதப் பிரச்சினையும் தருவதில்லை என்றார்.
கத்தாருக்கு வந்த இந்தியத் தூதர் டாக்டர் ஜார்ஜ் சோசப்பிடம் இத்தகவலை கத்தார் அமைச்சர் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் வங்கதேசத்தவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களுக்கு விசா வழங்க பல நாடுகள் தடை விதித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தியர்கள் நல்லவர்கள் என்று கத்தார் அமைச்சர் பாராட்டியிருப்பது இந்தியர்களுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
கத்தாருக்கான இந்தியத் தூதர் ஜோசப் லெபனான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தூதராக தீபா கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஸ்வீடனுக்கான தூதராக உள்ளார். விரைவில் கத்தாருக்கு வந்து புதிய பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications