சக்தி ஜோதியின் கவிதை நூல் வெளியீட்டு விழா
தேனி: தேனியில் கவிஞர் சக்தி ஜோதியின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது.
கவிஞர் சக்தி ஜோதியின் 'நிலம் புகும் சொற்கள்' கவிதை நூல் அறிமுக விழா தேனியில் நடந்தது. தென் தேன் தமிழ் சங்க நிறுவனர் ஈஸ்வர வடிவு லிங்கா லிங்கம் தலைமை வகித்தார். தேனி மறைவட்ட தலைவர் அருள் முன்னிலை வகித்தார்.
துரை வேலன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல்ரகுமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், சிறுகதை எழுத்தாளர் ஷாஜஹான், கிழக்கு வாசல் ஆசிரியர் உத்தமசோழன், தேனி வர்த்தக சங்க செயலாளர் நடேசன், சௌந்திர பாண்டியன், கம்மவார் சங்க கல்லூரி இணைச் செயலாளர் தாமோதரன், ஸ்ரீ.வி.பி.ஆர்.கல்லூரி தாளாளர் ஜெய் புஷ்பராஜ், பொறியாளர் பொன்முடி, பொன்கணேஷ், சிதம்பரம், திருமதி.ஜெயா, போடி முத்துமனோகரன், பேராசிரியர் அப்துல்சமது, அப்துல்காதர் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள்.












Click it and Unblock the Notifications