150வது ஆண்டில் சென்னைப் பல்கலை!

1840-ம் ஆண்டு மாநிலக் கல்லூரியின் ஒரு அங்கமாக உருவானது சென்னைப்பல்கலைக் கழகம். (அதனால்தான் இந்தப் பல்கலைக்கழகத்துக்குத் தாய் என மாநிலக் கல்லூரியைச் சொல்கிறார்கள்.) மக்களின் உயர் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு அன்றைய சென்னை மாகாண ஆளுநர் லார்டு எல்பின்ஸ்டோன் தனிச் சட்டம் மூலம் இப் பல்கலைக் கழகத்தை லார்டு நார்டன் தலைமையில் அமைத்தார்.
அதன் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்ட திட்டங்களையொட்டி அதே பாணில் சென்னைப் பல்கலைக்கழகம் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியது.
1923-ல் சென்னைப் பல்கலைக்கழக எல்லைகள் வடக்கோ ஒரிஸ்ஸா, ஆந்திரா, ஹைதராபாத், மேற்கே மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் என மிகப் பரந்து விரிந்திருந்தது.
மைசூர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக் கழகம், திருவாங்கூர், ஆந்திரா, உஸ்மானியா,ஹைஐதராபாத், மங்களூர், மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கல்லைக்கழகம், வேளாண்மை, அன்னை தெரசா, எம்ஜிஆர் என 30 பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்த பெருமைக்குரிய கல்வி நிறுவனம் இது.
தேசிய அளவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதன்மைப் பல்கலைக்கழகம்.
இத்தனைச் சிறப்பு மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டு விழாவில், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் சேவை புரிந்தமைக்காக பிரதமர் மன்மோகன் சிங்குங்கும், நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைகள் மற்றும் மதச்சார்பின்மைக்காக சோனியா காந்திக்கும் பெருமைக்குரிய டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக நீதிக்காக ஆற்றிய பணிகளுக்காக முதல்வர் கருணாநிதி, வறுமை ஒழிப்புக்காக யுனிடோ தலைமை இயக்குனர் கண்டே உம்கலா ஆகியோருக்கும் இதே விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.
இந்த விழாவையொட்டி சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் 39 புத்தகங்கள் வெளியாகின்றன.
சேப்பாக்கம் வளாகத்தில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி 8 புத்தகங்களை வெளியிடுகிறார் மன்மோகன் சிங்.
அதே போல தரமணியில் அமையவுள்ள புதிய வளாகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி 9 புத்தகங்களை வெளியிடுகிறார், சோனியா. கிண்டி வளாகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி 12 புத்தகங்களை வெளியிடுகிறார் கருணாநிதி.
சேப்பாக்கம் வளாகத்தில் கட்டப்படும் நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டி 10 புதிய புத்தகங்களை வெளியிடுகிறார் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications