மதுரையில் ஆக.16ல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

மாநாட்டினை நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் கடந்த 14-6-08 அன்று மாலையில் மதுரையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மறவன் புலவு கா.சச்சிதானந்தம், பொதுச்செயலாளர்கள் தி. அழகிரிசாமி, அரணமுறுவல், பொருளாளர் ம. பொன்னிறைவன், இறைக்குருவனார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்புக்குழுத் தலைவராக மு.ரெ. மாணிக்கம், துணைத் தலைவர்களாக கு. வேலன், மரு.பொ. முத்துச்செல்வம், க. ஜான்மோசஸ், புலவர் இராமச்சந்திரன், முகமது இஸ்மாயில், மு.அங்கையற்கண்ணன், வே. கிருட்டிணமூர்த்தி, செயலாளர்களாக வே.மு. பாண்டி, ச. பிச்சைக்கணபதி, பா.சிவக்குமார், பேரா.அறிவரசன், கான்சாபுரம் சோமு, ரெ. இராசு, ஆ. நெடுஞ்சேரலாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளராக ச.செளந்திரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிதிக்குழுத் தலைவராக கா. பரந்தாமன், உறுப்பினர்களாக கு.செ. வீரப்பன், அ. ஆறுமுகம், சி.சி.சாமி ஆ.ச.அ.குருசாமி, த. சிவனாதபாபு, க.நடராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
விளம்பரக்குழுத் தலைவராக வெ.ந. கணேசன் உறுப்பினர்களாக மு. கருப்பையா, பி. அன்சாரி, தி. முருகன், புதூர்அப்துல்லா, சு. வாசுதேவன், பு.திரவியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
விருந்தோம்பல் குழுவின் தலைவராக பழ. தமிழ்மாறன், உறுப்பினர்களாக தமிழாலயன், மு.சந்திரபாபு, சு. மருதுபாண்டியன், முத்து இரஞ்சிதம், ஆரோக்கியசாமி, ஐ. ஜெயராமன், சுப. குழந்தை வடிவேலன், அ. ஆனந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொண்டர்படைக் குழுத் தலைவராக மு. அழகிரிசாமி, உறுப்பினர்களாக பரிதி, இராசா சீனி வாசன், வை.வேல்முருகன், டி. உலக நாதன், கே. இராமசுப்பு, இராசேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டு அலுவலகம் 34, மேலச்சித்திரை வீதி, மதுரையில், செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications