சிறைக் கைதிகளுக்கு வளர்கல்வி: நாகை ஆட்சியர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் கிளைச் சிறைக் கைதிகளுக்கு வளர்கல்வி திட்டம் மூலம் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன்.
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற, உலக எழுத்தறிவு தின விழாவில் அவர் பேசியது:
வளர்கல்வி இயக்கம் மூலம் அறிவொளி தீபம் - 1, 2, 3 என்ற அலகுகளாகக் (unit) கல்வி கற்பிக்கும் பணி நடைபெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்தில் 18,900 பேருக்குக் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வி அறிவுப் பெறாதவர்கள் வளர்கல்வி திட்டம் மூலம் கல்வி கற்க முன்வந்து, நாகை மாவட்டம் முழுமையான கல்வி அறிவுப் பெற்ற மாவட்டமாக திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் மு. ஜெயராமன்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அண்ணாதுரை, மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் எஸ். சூர்யகலா, அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. பழனிவேல்சாமி, பூம்புகார் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கே. பாண்டியன், ஏடிஎம் கல்லூரி விரிவுரையாளர் ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.
வளர்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. லதா வரவேற்றார். வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரா. தமிழ்மணி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications