முதுகுளத்தூரில் 'பச்சை இரத்தம்' நூல் வெளியீடு
நாளை (25ம் தேதி) முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற நமது மாணவர்களுக்கு
பரிசளிப்பு விழா,
இஸ்லாமிய பயிற்சி மையத்திற்கு லேப்டாப் வழங்குதல், 'பச்சை இரத்தம்' ( இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய முஸ்லிம்கள் பற்றிய) நூல் வெளியீடு உள்ளிட்டவை முப்பெரும் விழாவாக நடைபெறுகிறது.
இந்த நூலை இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி பேராசிரியர்கள் ஆபிதீன் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் எழுதியுள்ளனர்.
நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஏ. ஷாஜஹான், திடல் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபாபுரம் பள்ளிவாசல் தலைவர் செய்யது இப்ராஹிம், கல்விக்குழுத் தலைவர் திவான்
முஹம்மது, மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.கமால்நாசர், தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், முன்னாள் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.நெய்னா முஹம்மது,
நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ். லியாக்கத் அலி, வரிசை முஹம்மது, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் என். காதர்ஷா, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ, டாக்டர் குலாம், டாக்டர் ஷேக் முகைதீன் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.
லெப்டினட் பேராசிரியர் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்துகிறார். பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம் ஆய்வுரை நிகழ்த்துகிறார்.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், இஸ்லாமிக் பயிற்சி மைய முதல்வர் ஏ.சுல்தான் அலாவுதீன் சேட் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு 94880 23199 அல்லது [email protected] எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.