2008ன் முக்கிய சம்பவங்கள்!
கடந்து சென்ற ஆண்டில் தமிழகம், இந்தியா, உலகம் என பல மட்டத்திலும் விட்டுச் சென்ற சில மறக்க முடியா தடங்கள்...

ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்து நம்ம போலீஸ்தான் என்று தமிழக போலீஸார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு லத்தியுடன் ராயலாக திரிந்த காலமெல்லாம் போய் விட்டது.
நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் வன்முறை காவல்துறையின் பெருமையை தூக்கிப் போட்டு துவம்சம் செய்து விட்டது.
தங்களது கண் முன்பாக சக மாணவனை மற்ற மாணவர்கள் மாட்டை, ஆட்டை அடிப்பது போல போட்டு அடித்தபோது அதை சத்தமே போடாமல், கல் மனதோடு கண்டு களித்துக் கொண்டிருந்த காவல்துறையைப் பார்த்து நாடே வெட்கிப் போனது.
காவல்துறை மீது படிந்த எண்ணற்ற களங்கங்களில் ஒன்றாக இந்த சட்டக் கல்லூரி வன்முறையும் படிந்து விட்டது.
கத்தி, கட்டை, இரும்புக் கம்பி என பல விதமான ஆயுதங்களுடன் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய அந்த வெறியாட்டத்தில் ஆறுமுகம், பாரதி கண்ணன் உள்ளிட்ட 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
காவல்துறை, 'கட்டுப்பாட்டுடன்' இருந்து 'கடமை' தவறி, 'கண்ணியத்தையும்' தொலைத்த ஆண்டு இது.












Click it and Unblock the Notifications