வைரமுத்துவின் 'கலைஞர் சொற்பொழிவுகள்'-நூல் வெளியீடு
சென்னை: தனது நூல் வெளியீட்டு விழாக்களில் முதல்வர் கருணாநிதி பேசியவற்றை தொகுத்து என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள நூல் ஜனவரி 2ம் தேதி வெளியிடப்படுகிறது.
தியாகராய நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் விழா நடைபெறுகிறது. விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட, கவிஞர் கனிமொழி அதைப் பெற்றுக் கொள்கிறார்.
முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், திருச்சி சிவா எம்.பி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகிறார்.
கடந்த 20 ஆண்டுகளில் நடந்த வைரமுத்துவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் (11 விழாக்கள்) முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர் தேசம், பெய்யெனப் பெய்யும் மழை, தமிழுக்கு நிறம் உண்டு, வைரமுத்து கவிதைகள், ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், கருவாச்சி காவியம், கொஞ்சம் தேநீர் நிறைய வானம் ஆகிய நூல்களின் வெளியீட்டில், கருணாநிதி ஆற்றிய உரைகள் இந்த தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications