For Daily Alerts
Just In
துபாயில் இலங்கை கவிஞரின் நூல் வெளியீடு
துபாயில் சங்கமம் தொலைக்காட்சியின் கவிஞர் இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் எழுதிய 'வேர் அறுந்த நாட்கள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 மாலை பின்னர் துபாய் கராமா பகுதியில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் நடைபெறுகிறது.
டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் பதினெட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியால் எழுதப்பட்ட பண்டார வண்ணான் நூலை காவியமாக வடித்துள்ளார். இலங்கை அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேலும் விவரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளரும், சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குருமான கலையன்பனை (050 6507604) தொடர்பு கொள்ளலாம்.
Story first published: Thursday, January 1, 2009, 14:30 [IST]