சிறுமி-தவளை திருமணம்: விசாரணைக்கு அரசு உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள குடும்பத்தினரை மாப்பிள்ளை (தவளை) வீட்டாராகவும், மேற்கு பகுதியில் உள்ளவர்களை பெண் வீட்டாராகவும் கருதி வருகின்றனர்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று இந்த கிராமத்தில் வினோதமான தவளை திருமணம் நடைபெறுவது வழக்கம்.
தவளைக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்தால் ஊரில் நோய் பரவாது என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை.
அந்த வழக்கத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை காணும் பொங்கலன்று தினத்தன்று பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரிக்கும் (8), ஒரு தவளைக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு:
இந்த சம்பவம் குறித்து தட்ஸ்தமிழ் உள்பட பல்வேறு மீடியாக்களில் செய்திகள் வெளியாயின.
இதையடுத்து இந்த திருமணம் குறித்து விசாரணை நடத்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளது.
அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அமிர்த கெளரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications