துபாய் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன்
Subscribe to Oneindia Tamil
துபாய் வானலை வளர்தமிழ் மாதாந்திர கவியரங்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த நெல்லை கண்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
கவிதை எழுத வேண்டுமெனில் அதிகம் படிக்க வேண்டும், தமிழ் மொழியினை சிறப்புற கற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உறவுகள் எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கவியரங்க கவிதைகள் நூலாக தொகுத்து வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் சிவ் ஸ்டார் பவன் அதிபர் கோவிந்தராஜ், வானலை வளர்தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் காவிரி மைந்தன், சந்திரசேகர், ஜியாவுத்தீன், சிம்மபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமீரகக் கவிஞர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.













Click it and Unblock the Notifications