நெல்லை வாலிபரை கரம் பிடிக்கும் இங்கி. பெண்
நெல்லை: நெல்லை வாலிபர் மீது காதல் கொண்ட இங்கிலாந்து பெண்ணுக்கு, அவருடன் நேற்று நிச்சயர்த்தம் நடந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் நெயில் பிரைடனின் மகள் எம்மா பிரைடன். அங்கு மருத்துவராக உள்ளார். நெல்லை மாவட்டம் இட்டமொழியை சேர்ந்த தொழிலதிபர் வின்சென்ட் தியாகராஜனின் மகன் பெனியேல் வின்சென்ட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்த எம்மா அவர் மீது காதல் கொண்டுள்ளார். இதையடுத்து எம்மாவின் பெற்றொர் பாளையங்கோட்டையில் வசிக்கும் பெனியேலின் பெற்றோர்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர்.
பெனியேல் மேற்கல்வி கற்பதால் 6 மாதம் கழித்து திருமணம் முடிக்கலாம் என அவரது பெற்றொர் சம்மதம் தெரிவித்தனர்.
ஆனாலும் திருமணம் தமிழ்நாட்டு சம்பிரதாயப்படி தான் நடக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதேயடுத்து இரு நாட்களுக்கு முன் எம்மா, அவரது பெற்றொர், அவரது உறவினர்கள் நெல்லைக்கு வந்தனர்.
நேற்று தனது மகளுக்கு நெல்லை பிளாசாவில் நிச்சயர்த்தம் நடத்தினர். தனது உறவினர்கள் சுமார் 30 பேருடன் பட்டுச் சேலை கட்டி 1 மணி நேரம் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து எம்மாவின் உறவினர் ரிச்சர்டு கூறுகையில், வேட்டி, சட்டை அணிவது மிகவும் மகிழ்ச்சியானது. தமிழ் பண்பாடு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. எங்கள் திருமண முறையிலிரு்ந்து மாறுபட்டிருந்தாலும் இது மனதுக்கு பிடித்தமாக உள்ளது என்றார் ரிச்சர்டு.
பின்னர் சகோதரிகள் தாம்பூல தட்டு ஏந்தி வர மாப்பிள்ளை அழைத்து வரப்பட்டார். மணமக்கள் மோதிரமும், பைபிளும் மாற்றிக் கொண்டனர்.