துபாயில் மானுட வசந்தம்
துபாய்: துபாய் இந்திய முஸ்லீம்கள் சங்கத்தின் (ஈமான்)சார்பில் பிப்ரவரி 27ம் தேதி மானுட வசந்தம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
துபாய் ஈமான் (www.imandubai.org) அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை சரியாக ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.
இந்நிகழ்வில் இஸ்லாம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.
தமிழன் தொலைக்காட்சி வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் இந்நிகழ்ச்சி துபாயிலும் பதிவு செய்யப்படுகிறது.
இஸ்லாம் பற்றிய உங்களது சந்தேகங்களை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம். பாரபட்சமில்லாத உங்கள் உணர்வுகளை உன்னதமாக உணர்த்தலாம். சகோதர சமுதாயத்தினர் சமர்ப்பிக்கும் கேள்விகளை முன்னுரிமையாக்கலாம்.
இந்நிகழ்சி முழுவதும் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399 என்ற தொலைபேசி எண்களையும்,
www.imandubai.org என்ற இணையதளத்தையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.