For Quick Alerts
For Daily Alerts
Just In
பா.முத்துக்குமரனுக்கு இலக்கிய சிந்தனை பரிசு
சென்னை: இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான பரிசு பா. முத்துக்குமரன் எழுதிய காத்திருக்கிறாள் கரும்பு என்ற சிறுகதைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய சிந்தனை அமைப்பு ஆண்டு தோறும் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறது. இந்தாண்டுக்கான பரிசுக்கு பா.முத்துக்குமரன் எழுதிய காத்திருக்கிறாள் கரும்பு என்ற சிறுகதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பா.முத்துக்குமரன் (51) சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர்.
இவர் சேலம் கலைக்கல்லூரியில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவர். இவருடைய சிறுகதைத் தொகுப்பு மஞ்சுவின் டைரி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
அவர் தினமணி நாளிதழில் துணை செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Comments
Story first published: Monday, March 2, 2009, 12:07 [IST]