மஸ்கட்டில் மானுட வசந்தம் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மஸ்கட்: ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்குபெற்ற மானுட வசந்தம் நிகழ்ச்சி மார்ச் 5ம் தேதி நடந்தது.
அன்று மாலை அல் மாஸா ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஃபஸல் தலைமை தாங்கினார். மானுட வசந்தம் நிகழ்ச்சியின் நெறியாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்கள் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு அறிவுப்பூர்வமான பதில்களை வழங்கினார்.
மிகக் குறுகிய கால அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மட்டுமல்லாது சகோதர சமுதாயத்தினரும் 400 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று தங்களது ஐயங்களுக்கு விளக்கம் பெற்றுச் சென்றனர்.
அப்துல் ரவூஃப் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.












Click it and Unblock the Notifications