கோடை-ஆனைமலை புலிகள் சரணாலயம் மூடல்!
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் வன சரணாலயத்தில் புலி, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, மான், காட்டுப்பன்றி உள்பட பல வன விலங்குகள் உள்ளது. பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, உடுமலை ஆகிய 6 வன சரகங்களை கொண்டது ஆனைமலை.
இந்த புலிகள் வன சரணாலயத்தில் டாப்சிலிப், ஆழியார், வால்பாறை உள்பட பல சுற்றுலா தலங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக இந்த வன சரணாலயம் கடந்த 1ம் தேதி முதல் மூடப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு பெய்த பரவலான மழையால் வனப்பகுதி கோடையை தாக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழையை தொடர்ந்து கோடை வெயிலும் அதிகமாக இருந்ததால் ஆனைமலை புலிகள் வன சரணாலயம் மீண்டும் 25 நாட்களுக்கு மூடப்பட்டது.
அதன்படி மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை சரணாலயத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி செல்லும் சுற்றுலா பயணிகள் புலிகள் வன சரலாயத்தைக் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.